மக்களவைத் தேர்தலில் முழு வாக்குப் பதிவை வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் வாரச் சந்தையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர்களுக்கு வழிகாட்டி கையேடு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
மேலும், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிக்க வேண்டும், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கதிர்சங்கர் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.