முழு வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

முழு வாக்குப் பதிவை வலியுறுத்தி அரியலூரில் மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


முழு வாக்குப் பதிவை வலியுறுத்தி அரியலூரில் மகளிர் திட்டம் சார்பில் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், மகளிர் திட்ட இயக்குநர் லலிதா ஆகியோர் தொடக்கி வைத்தனர். பேரணியானது பேருந்து நிலையம், கடைவீதி, செந்துறை சாலை வழியாகச் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் கலந்து கொண்ட மகளிர் சுய உதவிக் குழுவினர், 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம், அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்திச் சென்று, பொதுமக்களிடம் வழிக்காட்டி கையேடுகளை வழங்கினர். முன்னதாக அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com