உடையார்பாளையம் வட்ட அகிலபாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் ஜயங்கொண்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உடையார்பாளையம் வட்டத் தலைவர் கோ. சிவசிதம்பரம் தலைமை வகித்தார். ந. இலக்குவன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் அருமைநாதன், சி. சண்முகசுந்தரம், ப. ராஜேந்திரன், மா. சுப்பிரமணியன், ம. லூர்துசாமி உள்ளிட்டோர் பேசினர்.
இதில் வரும் தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வலியுறுத்த வேண்டும். சங்கத்தின் மூலமாக வழங்கப்படும் ஊக்கத்தொகையை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இலக்குவன், த. ராமமூர்த்தி, சுந்தரேசன், சி. ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சீ. கலியமூர்த்தி வரவேற்றார். பூ. ராமசாமி நன்றி கூறினார்.