அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் நலச்சங்கம் சார்பில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும்

அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள தேவாமங்கலம் கிராமத்தில் பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் நலச்சங்கம் சார்பில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். செயலர் சின்னப்பா முன்னிலை வகித்தார். உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் மணிவண்ணன்  அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற கிராம மாணவர்களுக்கும், தமிழக அரசு மூலம் வெளிநாட்டுக்கு கல்வி சுற்றுலா சென்று வந்த மாணவர்களையும் பாராட்டி பரிசு வழங்கினார். விழாவில், தேவாமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழமலை, தலைமை ஆசிரியர்(பொ) கோபிநாத், ஆசிரியர்கள் முத்தமிழ்ச்செல்வன் சம்பத்குமார் மற்றும் பொதுமக்கள், சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com