எம்.ஆர்.சி கல்லூரியில் பேச்சுப் போட்டி

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
படிப்பதும் சுகமே எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டியில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.
கல்லூரி இயக்குநர் த.ராஜமாணிக்கம், இணைச் செயலர் எம்.ஆர்.கமல்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடுவர்களாக பேராசிரியர்  இளையபெருமாள், பழனியாண்டி, வேல்முருகன், பேராசிரியை ஹேமலதா ஆகியோர் செயல்பட்டனர். முன்னதாக தமிழ்த்துறை பேராசிரியர் சுரேஷ் வரவேற்றார். போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com