பெரம்பலூரில் மேலும் 2 நீதிமன்றங்களுக்கு இன்று திறப்பு விழா

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 2 புதிய நீதிமன்றங்களுக்கான திறப்பு விழா திங்கள்கிழமை (ஆக. 12) நடைபெறுகிறது.


பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 2 புதிய நீதிமன்றங்களுக்கான திறப்பு விழா திங்கள்கிழமை (ஆக. 12) நடைபெறுகிறது.

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், புதிதாக குற்றவியல் நீதிமன்றமும், வேப்பந்தட்டையில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றமும் திறக்கப்படுகிறது. பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றம் 2-இல் குன்னம், பாடாலூர், மருவத்தூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட வழக்குகள், கியூ பிராஞ்ச், சிவில் சப்ளை சம்மந்தப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். 

வேப்பந்தட்டையில் திறக்கப்படும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் அரும்பாவூர், கை.களத்தூர், வி.களத்தூர், மங்களமேடு ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

  திறப்பு விழா: பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை காலை 9.15 மணியளவில் நடைபெறும் திறப்பு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கே. ரவிச்சந்திரபிரபு, பி. புகழேந்தி ஆகியோர் நீதிமன்றங்களை திறந்து வைக்கின்றனர். 

இவ் விழாவில், மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com