தீபாவளி பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை மற்றும் பட்டாசுகள் இருப்பு வைத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியர் டி.ஜி. வினய் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் புதிய தற்காலிக பட்டாசு சில்லரை வணிகம் செய்ய, இருப்பு வைத்துக் கொள்ள உரிமம் கோரும் விண்ணப்பங்களை இ-சேவை மையங்களில் இணையதளம் மூலம் வெடி மருந்து சட்ட விதிகளுக்குட்பட்டு உரிய ஆவணங்களுடன் 31.08.2019-க்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கு பின்னர் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.