அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேயுள்ள மு. புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி சூரியகலா(25). இவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம்.
இதனால் விரக்தியில் இருந்த சூரியகலா கடந்த 10 ஆம் தேதி எலிமருந்தை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். அரியலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூரியகலா, அங்கு சனிக்கிழமை உயிரிழந்தார். விக்கிரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.