அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே முன்விரோத தகராறில் பெண்ணை தாக்கியவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த கலைசெல்வன் மனைவி அகிலா(27). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாருக்கும்(43) முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இவர்களிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அகிலாவை தகாத வாத்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அகிலா அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர்.