விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீபுரந்தான் செக்கடி தெருவைச் சேர்ந்த அருமைகண்ணு மனைவி பார்வதி (60) தனது பெட்டிகடையின் பின்புறம் மதுவை பதுக்கி விற்றது தெரியவந்தது.
இதையடுத்து பார்வதியை போலீஸார் கைது செய்து அவரிடமிருந்த மதுவை பறிமுதல் செய்தனர்.