மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள்

அரியலூர் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகள்  நடைபெற்றன.

அரியலூர் வட்டார வள மையத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகள்  நடைபெற்றன.
தொடக்கநிலை, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பள்ளி மாணவ, மாணவிகளிடையே நடந்த போட்டியில் பங்கு பெற்றவர்கள் வட்டார அளவிலான போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்றவர்கள்.
இப்போட்டியில் தொடக்கநிலையில் 1-3 ஆம் வகுப்பு மாணவ,மாணவியர்களுக்கு ஓவியப் போட்டியும்,4-5 ஆம் வகுப்பு மாணவ,மாணவியர்களுக்கு பேச்சுப் போட்டியும், 6-12 ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு ஓவியம்,பேச்சு, கட்டுரை போட்டியும் நடத்தப்பட்டது. 
போட்டியை வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) செல்வராணி தொடக்கி வைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. புகழேந்தி பார்வையிட்டார். மாலையில்  பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
போட்டியில் நடுவர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் சிவசங்கரன், தேன்மொழி, அமராவதி, மாரிமுத்து, ஜெயவேணி, இசையமுது, செல்வமணி, செந்தமிழ்செல்வி, அங்கயற்கண்ணி, மகேஸ்வரிபாய் ஆகியோர் செயல்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com