அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு அருகே ரயிலில் அடிப்பட்டு இளைஞர் உயிரிழந்தார்.
ஈச்சங்காடு காலனித் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் மகன் சிவகுருநாதன் (27). இவருக்கு காது கேட்காது. இந்நிலையில் இவர் செவ்வாய்க்கிழமை ஈச்சங்காடு ரயில்வே தண்டவாளத்தை கடந்த போது அந்த வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரியலூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.