மாணவர்கள் கதை சொல்லும் நிகழ்ச்சி

அரியலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட மையம் நூலகம் சார்பில் மாணவர்களுக்கான கதை கூறும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 

அரியலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட மையம் நூலகம் சார்பில் மாணவர்களுக்கான கதை கூறும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. 
மாணவர்களின் சிந்தனைத் திறனை மேம்படுத்தவும்,பேச்சாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும் நடைபெற்ற  நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு அறிவுப்பூர்வமான பல கதைகளைக் கூறினர். இதில் சிறப்பாக கதை  சொல்லிய முதல் 3 மாணவர்களுக்கு  கல்கத்தா ராஜாராம் மோகன்ராய் நூலக அறக்கட்டளை களப் பணி உதவியாளர் அஸீம்குமார் சென் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் இரா. சண்முகநாதன், அலுவலக உதவியாளர் இ. மலர்மன்னன் , மைய நூலகர் க. ஸான் பாஷா , நூலகர் ச. அம்பேத்கர், பள்ளி தலைமை ஆசிரியை அம்சவள்ளி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com