பத்தாம் வகுப்பு தேர்வு: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம்

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்கக உதவி இயக்குநர் கோ. சுரேஷ்  வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2019,  மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஜன.14 ஆம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,ஜன 14  ஆம் தேதி போகிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்தால் ,தனித்தேர்வர்கள் ஆன்-லைனில்ஸ ஜனவரி 18,19 தேதிகளில் விண்ணப்பிக்கும் வகையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதை தனித்தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com