பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்கக உதவி இயக்குநர் கோ. சுரேஷ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2019, மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் ஜன.14 ஆம் தேதி வரை கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,ஜன 14 ஆம் தேதி போகிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்தால் ,தனித்தேர்வர்கள் ஆன்-லைனில்ஸ ஜனவரி 18,19 தேதிகளில் விண்ணப்பிக்கும் வகையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதை தனித்தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.