அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தில் மதுபானங்களை விற்பனை செய்தவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் வினோத் கண்ணன் தலைமையிலான போலீஸார் திங்கள்கிழமை காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது விக்கிரமங்கலம் பிரதான சாலையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (48) வீட்டின் பின்புறத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, ரகசியமாக விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் ரவிச்சந்திரன் கைது செய்து, அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.