டிக் டாக் செயலியில் அவதூறு பதிவிட்ட இளைஞர் கைது

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி டிக் டாக் செயலில்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி டிக் டாக் செயலில் பதிவிட்ட இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மீன்சுருட்டி அருகேயுள்ள முதுகுளம் காலனி தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சத்தியமூர்த்தி (31). 
இவர், டிக் டாக் செயலியில் இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி, அதனை சமூக வலை தளங்களில் வெளியிட்டுள்ளார். 
இதனையறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மீன், மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து சத்தியமூர்த்தியை வியாழக்கிழமை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com