மீன்சுருட்டி அருகே மனநலன் பாதித்த பெண்ணைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டிமடம் அருகிலுள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த பொய்யாமொழி மனைவி சுதா (37). கடந்த சில மாதங்களாக மனநலன் பாதிக்கப்பட்ட இவரை, இறவாங்குடியிலுள்ள தனது சகோதரி ஜெயந்தி வீட்டுக்கு அழைத்துச் சென்ற பொய்யாமொழி அங்கிருந்து சிகிச்சை அளித்து வந்தார். கடந்த மாதம் 28 ஆம் தேதி கூலி வேலைக்குச் சென்ற ஜெயந்தி, மாலையில் வீடு திரும்பிய போது சுதாவைக் காணவில்லை. இதுகுறித்து மீன்சுருட்டி காவல் நிலையத்தில் ஜெயந்தி திங்கள்கிழமை புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.