அரியலூர் மாவட்டம், விளாங்குடியில் சாலையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மன நலம் பாதிக்கப்பட்ட பெண் அங்குள்ள காப்பகத்தில் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டார்.
வி.கைகாட்டி அடுத்த விளாங்குடி சாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், புதன்கிழமை சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். இதை கவனித்த கயர்லாபாத் போலீஸார் அந்தப் பெண்ணை மீட்டு விளாங்குடியில் இயங்கி வரும் வேலா கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் போலீஸார் அவர் எந்த ஊர்,பெயர் எங்கிருந்து வந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.