அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த ஈச்சங்காடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் புதன்கிழமை ( ஜூன் 12) நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆர்.எஸ்.மாத்தூர், அசாவீரன்குடிக்காடு, குறிச்சிகுளம், பூமுடையான்குடிக்காடு, துளார், அதனக்குறிச்சி,
கோட்டைக்காடு, குவாகம், கொடுக்கூர், இடையக்குறிச்சி, வல்லம், முள்ளுக்குறிச்சி, தாமரைப்பூண்டி, ஆலத்தியூர், இருங்களாக்குறிச்சி, மணக்குடையான், மாறாக்குறிச்சி, சோழன்பட்டி,புதுப்பாளையம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9.45 முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.