அரியலூர் மாவட்டம், உடையார்பளையம் அருகே இரு தரப்பினர் மோதிக் கொண்ட வழக்கில் 4 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
உடையார்பாளையம் அருகேயுள்ள காங்கேயன்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதிதாசன் மனைவி கனிமொழி (22). அதே பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ரவிச்சந்திரன்(23). இரு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்த
நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினர் அளித்த புகாரில் உடையார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிந்து, ராஜேந்திரன்,அவரது மனைவி பரமேஸ்வரி(21), பாரதிதாசன்(24), அவரது தந்தை பாலசங்கர் ஆகிய 4 பேரையும் புதன்கிழமை கைது செய்தனர்.