அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வாரச் சந்தையில் ஒருங்கிணைந்த குழந்தைகளின் வளர்ச்சித் திட்டம் மற்றும் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகேஷ்வரி கலந்து கொண்டு, ரத்தச் சோகை மற்றும் ஊட்டச்சத்து குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டு பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தினர். பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு ஊட்டச்சத்து குறித்த கருத்துகளை ஆர்வமுடன் கேட்டனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் கவியரசி வரவேற்றார். திட்ட உதவியாளர் சரவணக்குமார் நன்றி கூறினார்.