அரசு கலைக் கல்லூரியில்  மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது.
கல்லூரி முதல்வர்(பொ) ஜெயகுமார் கலந்தாய்வைத் தொடக்கி வைத்தார். இளங்கலை வணிகவியல், ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வில் 750-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் 100 மாணவ, மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். வியாழக்கிழமை (மே 16) அனைத்து அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், வெள்ளிக்கிழமை (மே 17) தமிழ், வரலாறு, பொருளியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் காலை 9 மணிக்கு அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு வரவேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com