சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி
By DIN | Published On : 16th May 2019 08:45 AM | Last Updated : 16th May 2019 08:45 AM | அ+அ அ- |

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சுமை ஆட்டோ மோதி காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்
திருமானூர் அருகேயுள்ள பளிங்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மணிகண்டன்(45), செவ்வாய்க்கிழமை இரவு திருமானூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, விழுப்பணங்குறிச்சி வளைவில் எதிரே வந்த சுமை ஆட்டோ மோதி காயமடைந்தார். அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு கிசிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு அவர் உயிரிழந்தார் . இதுகுறித்து திருமானூர் போலீஸார் வழக்குபதிந்து சுமை ஆட்டோ ஓட்டுநர் ஏலாக்குறிச்சியைச் சேர்ந்த சிவானந்தத்தை தேடிவருகின்றனர்.