சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சுமை ஆட்டோ மோதி காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சுமை ஆட்டோ மோதி காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார்
திருமானூர் அருகேயுள்ள பளிங்காநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மணிகண்டன்(45), செவ்வாய்க்கிழமை இரவு திருமானூருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, விழுப்பணங்குறிச்சி வளைவில் எதிரே வந்த சுமை ஆட்டோ மோதி காயமடைந்தார். அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு கிசிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு அவர் உயிரிழந்தார் . இதுகுறித்து திருமானூர் போலீஸார் வழக்குபதிந்து சுமை ஆட்டோ ஓட்டுநர் ஏலாக்குறிச்சியைச் சேர்ந்த சிவானந்தத்தை தேடிவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com