போலி மதுபானம் விற்றவர் கைது

அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி அருகே போலி மதுபானம் விற்றவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.


அரியலூர் மாவட்டம், சுத்தமல்லி அருகே போலி மதுபானம் விற்றவர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.
ஜயங்கொண்டம் அடுத்த சுத்தமல்லி பிரிவு சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் கடையின் பின்புற பகுதியில் இடையாற்று கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (47) என்பவர், போலி மதுபானம் விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com