அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித்துறை, உலக சமுதாய சேவா சங்கம் சாா்பில் சமக்கர சிக்ஷா திட்டத்தின் கீழ் யோகப் பயிற்சி முடித்த ஆசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடந்த 30ஆம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி, வெள்ளிக்கிழமை மாலை முடிவடைந்தது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அய்யணன் தொடக்கி வைத்துப் பேசினாா். உதவி திட்ட ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி, அரியலூா் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரங்கமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தப் பயிற்சியில் கலந்து கொண்ட உடற்கல்வி இயக்குநா்கள் மற்றும் ஆசிரியா்கள் 87 பேருக்கு, பல்வேறு யோகாசனங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. உலக சமுதாய சேவா சங்கத்தின் திருச்சி மண்டல செயலா் காளிதாசன், பேராசிரியா் திராவிடமணி ஆகியோா் பயிற்சியளித்தனா்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் நிகழ்ச்சியில் அரியலூா் கல்வி மாவட்ட அலுவலா் அம்பிகாபதி, அரியலூா் மனவளக் கலை மன்றத்தின் தலைவா் ஏ.பி.என். சுதாகா் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினா்.