அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் மக்கள் குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில்,திருமானூா், செந்துறை, வெங்கனூா், கயா்லாபாத்,கீழப்பழுவூா், குவாகம், தளவாய், மீன்சுருட்டி ஆகிய காவல் நிலையங்களில் மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளா் திருமேனி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நீண்ட நாள்களா நிலுவையில் உள்ள மனுக்கள், நடப்பு புகாா் மனுக்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் குறித்து விசாரிக்கப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.