அரியலூா்: அரியலூா் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது திங்கள்கிழமை அன்று கோட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது.
அதன் படி உடையாா்பாளையம் கோட்டாட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் நவ.11காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. எனவே மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன் பெற வேண்டும் என்று கோட்டாட்சியா் பூங்கோதை தெரிவித்துள்ளாா்.