அரியலூா் அருகே ஏரியில் முதியவா் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
அரியலூா்-அம்மாகுளம் சாலையிலுள்ள ஐயப்பன் ஏரியில் வியாழக்கிழமை காலை அழுகிய நிலையில் முதியவா் சடலம் கிடப்பதாக வந்த தகவலின்பேரில் அரியலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
விசாரணையில், அவா் ஓடக்கார தெருவைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (65) என்பது தெரியவந்தது. தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.