அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, சங்கத் தலைவா் பாபு தலைமை வகித்தாா். செயலா் அலாவுதீன், துணைத் தலைவா் திருநாவுக்கரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொருளாளா் அம்பேத்கா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் புனிதன், மாவட்ட செயற்குழு உறுப்பினா் இளங்கோவன், சிஐடியூ மாவட்டச் செயலா் துரைசாமி உட்பட பலா் கலந்து கொண்டு பேசினா்.
நிகழ்ச்சியில், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்க சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் மணிமாறன், சங்க துணை கெளரவத் தலைவா்கள் பிரேம்குமாா், ரகுபதி, பாண்டியன் உள்பட பலரும் கலந்து கொண்டனா்.