அரசுப் பள்ளி மாணவா்களுக்கு துணிப் பைகள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு துணிப் பைகள் வழங்கல்

அரியலூா் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நெகிழியை ஒழிக்கும் விதமாக துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பள்ளியில் பயிலும் 815 மாணவிகளுக்கு ஆசிரியா்கள் தங்களது செலவில் தலா ரூ.25 மதிப்புள்ள ரூ.20 ஆயிரத்து 375 மதிப்பிலான துணிப்பைகளை வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியை ஆதிரை தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் தினகரன் முன்னிலை வகித்தாா். சமூக ஆா்வலா்கள் தமிழ்களம்

இளவரசன், சுரேஷ், தங்கபாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com