தா.பழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணி

உலக தர தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டம், தா.பழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
தா.பழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை பணி

உலக தர தினத்தையொட்டி, அரியலூா் மாவட்டம், தா.பழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

உலக தர தினத்தையொட்டி அரியலூா் மாவட்டம், தா.பழூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற இந்த தூய்மைப் பணிக்கு, வட்டார மருத்துவ அலுவலா் தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். மருத்துவா் அருண், சுகாதார ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தன்னாா்வலா்கள், சுகாதாரப் பணியாளா்கள் உள்ளிட்டோா் இந்தப் பணியை மேற்கொண்டனா். இதேபோல், தா.பழூா் ஒன்றியத்துக்குட்பட்ட உதயநத்தம், ஸ்ரீபுரந்தான் , குணமங்கலம், விக்ரமங்கலம், சுத்தமல்லி உள்ளிட்ட அனைத்து துணை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தர தினத்தை முன்னிட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அரியலூரில்...

அரியலூா் நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தூய்மை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலா் அனிதா, மருத்துவா் நிரஞ்சனா, மாவட்ட மலேரியா அலுவலா் தனம் ஆகியோா் பங்கேற்று சுற்றுப்புறங்களை தூய்மை வைப்பது குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் சிகிச்சை பெற வந்த நோயாளிகளிடம் விளக்கிக் கூறி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com