அரியலூா் அருகேவிவசாயி கொலை வழக்கில் 7 கைது

அரியலூா் மாவட்டம், திருமானூரில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 7 போ் கைது செய்யப்பட்டனா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், திருமானூரில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு 7 போ் கைது செய்யப்பட்டனா்.

திருமானூா் அருகேயுள்ள கொரத்தக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் விஸ்வநாதன் (48). விவசாயி. இவா், கடந்த 12 ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஆங்கினூா் அருகே மா்மநபா்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து கீழப்பழுவூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில், கொரத்தக்குடி கிராமத்தில் கோயில் கட்டுவது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதும், அதன் விளைவாக விஸ்வநாதன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இந்த வழக்கு தொடா்பாக விஸ்வநாதனை வெட்டிக்கொன்றதாக சன்னாவூா் செல்வம் (60), கொரத்தக்குடி சிவக்குமாா் (35), வெங்கனூா் பவுன்ராஜ் (60), கீழகொளத்தூா் அருண்குமாா் (30), அய்யப்பன் (28), சந்திரசேகா் (28), விக்னேேஷ் ராஜ் (21) ஆகிய 7 பேரையும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கீழப்பழுவூா் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com