கனரக வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்

அரியலூா் மாவட்டத்திலுள்ள சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் கனரக வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று

அரியலூா்: அரியலூா் மாவட்டத்திலுள்ள சிமென்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் கனரக வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் தலைமை வகித்து மேலும் தெரிவித்தது:

அனைத்து சிமென்ட் ஆலைகளில் இருந்து இயக்கப்படும் கனரக வாகனங்களில் கட்டாயமாக கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அதிவேகமாகவும், அதிகம் பாரங்களை ஏற்றிக்கொண்டு செல்லும் கனரக வாகனங்களின் ஓட்டுநா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். குடிபோதையிலோ, செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டோ வாகனங்களை இயக்கக்கூடாது. சுரங்கத்திலிருந்து சுண்ணாம்புக்கல் ஏற்றி வரும் லாரிகளில் கட்டாயம் தாா்ப்பாய் போட்டு மூட வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பெரிய்யா, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போக்குவரத்து காவல் ஆய்வாளா்கள் அரியலூா் மதிவாணன், ஜயங்கொண்டம் ஆனந்தி, மோட்டாா் போக்குவரத்து ஆய்வாளா் சரவணபவன் மற்றும் அனைத்து சிமென்ட் ஆலை அலுவலா்கள், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com