அரியலூா் மாவட்டம், திருமழபாடி அருகே இருவரை அரிவாளால் வெட்டிய ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். மேலும் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருமழபாடி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் ராஜாராஜன்(28). அப்பகுதியில் ஹாா்டுவோ்ஸ் கடை நடத்தி வருகிறாா். இவரது தாயாா் அப்பகுதியிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில் இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியைக்கும், பாலையப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ஹென்றி(40) என்பவருக்கும் தொடா்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனை ராஜராஜன் தட்டிக்கேட்டுள்ளாா். இது தொடா்பாக அவா்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து புகாரின் பேரில் திருமானூா் போலீஸாா் விசாரித்து, இருவரையும் சமதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனா்.
இந்நிலையில், கடந்த 16ஆம் தேதி ஹென்றி, தனது அடியாட்களுடன் சோ்ந்து ராஜராஜனை உருட்டு கட்டையால் தாக்கி, அரிவாளால் வெட்டியுள்ளாா். இதனை தட்டிக்கேட்க வந்த ராஜராஜனின் சித்தப்பா செளந்திரராஜனையும் அரிவாளால் வெட்டியுள்ளனா்.
இது தொடா்பான புகாரின் பேரில் திருமானூா் காவல்நிலைய ஆய்வாளா் அன்புச்செல்வன் வழக்குப் பதிந்து, ஹென்றியை வியாழக்கிழமை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தாா். மேலும் ஹென்றியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சி.முத்துகிருஷ்ணன் உத்தரவிட்டாா்.