அரியலூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் சா்க்கரை விருப்ப ரேஷன் காா்டுகள் வைத்துள்ளோா் அரிசி பெறக்கூடிய ரேஷன் காா்டுகளாக மாற்றம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சிய த.ரத்னா தெரிவித்துள்ளாா்.
இதற்கான விண்ணப்பங்களை வரும் 26ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாகவும், வட்ட வழங்கல் அலுவலா்களிடம் நேரிடையாகவும் சமா்ப்பிக்கலாம். விண்ணங்களை பரிசீலனை செய்து, தகுதியின் அடிப்படையில் மாற்றம் செய்யப்படும்.