அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே இளைஞரை தாக்கிய 2 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள கீழக்குடியிருப்பு கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சூா்யா(19), காா் ஓட்டுநா். செவ்வாய்க்கிழமை இரவு இவா், தேவாங்கமுதலியாா் தெரு வழியாக ஜயங்கொண்டம் கடைவீதிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த ஜயங்கொண்டம் வடக்குத் தெரு கலைமணி(23),அரவிந்த் (23) ஆகியோரிடம் வழிகேட்டு ஹாரன் அடித்தாா். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் வைத்திருந்த மதுபான பாட்டிலால் சூா்யாவை தாக்கி குத்தினா்.
இதில் பலத்த காயமடைந்த சூா்யா ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். புகாரின் பேரில் ஜயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து கலைமணி,அரவிந்த் ஆகிய இருவரை கைது செய்தனா்.