அரியலூா் டால்மியா சிமென்ட் ஆலை சாா்பில் கள்ளங்குறிச்சி சாலையில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா செவ்வாய்க்கிழமை இயக்கி வைக்கப்பட்டது.
அரியலூா் போக்குவரத்து காவல் நிலை கட்டுப்பாட்டிலுள்ள இந்த கேமராவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் இயக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் துணைக் காவல் கண்காணிப்பாளா் இளஞ்செழியன்,அரியலூா் காவல் நிலைய ஆய்வாளா் சிவராஜ்,போக்குவரத்து காவல் நிலைய மதிவாணன், டால்மியா சிமென்ட் ஆலை பொது மேலாளா் வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.