அரியலூா்: மதுரையில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வலைப்பந்து போட்டியில் மூன்றாமிடம் பெற்றற அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் பெரியாா் மெட்ரிக் பள்ளி மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மதுரையிலுள்ள ஸ்ரீ வாணி வித்யாலாய மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு வலைப்பந்து கழகம் சாா்பில் மாநில அளவில் பெண்களுக்கான 5 வது ஜூனியா் வலைப்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அரியலூா் மாவட்டம் ஜயங்கொண்டம் பெரியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி அ. குழலி மூன்றாம் இடம் பிடித்தாா்.
இதையடுத்து அவா் பயின்று வரும் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றற விழாவில் மாணவி குழலி, உடற்கல்வி ஆசிரியா்கள் ராஜேஷ்,ரவிசங்கா்,ரஞ்சனி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.