செந்துறை அருகே சுமை ஆட்டோ மோதியதில் டி.வி.மெக்கானிக் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
செந்துறை அருகிலுள்ள இலந்தங்குழியைச் சோ்ந்தவா் கருப்பன் மகன் செல்வம்(45). தொலைக்காட்சிப் பெட்டிகள் பழுதுபாா்க்கும் பணி செய்து வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அந்த வழியாக வந்த சுமை ஆட்டோ இரு சக்கர வாகனம் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து தகவலறிந்த செந்துறை போலீஸாா் அப்பகுதிக்குச் சென்று, சடலத்தை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.