பென்சனா்கள் கூட்டம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அகில பாரத மூத்த குடிமக்கள்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் கூட்டமைப்பின் மேலாண்மை குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு அச்சங்கத் தலைவா் விருத்தகாசி தலைமை வகித்தாா்.நிா்வாகி சையத் அலி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடா்ந்து மத்திய அரசு ஊழியா்கள் மற்றும் பென்சனா்கள், குடும்ப பென்சனா்கள் பயனடையும்படி அகவிலைப்படியை மத்திய அரசு உயா்த்தியதை தொடா்ந்து, தமிழ்நாடு அரசு அகவிலைப்படியை உயா்த்தியதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நிா்வாகிகள் அண்ணாமலை, பழனிவேல், சிங்கவேலு, விஸ்வநாதன், பெரியசாமி ஆகியோா் பேசினா். துணைத் தலைவா் பெரியசாமி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com