குடிமராமத்து பணிகள் ஆய்வு

அரியலூர் அருகே அருங்கால் ஓடையில் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அணைக்கட்டு புனரமைக்கும்

அரியலூர் அருகே அருங்கால் ஓடையில் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அணைக்கட்டு புனரமைக்கும் பணிகளையும், கல்லக்குடி பெரிய ஏரியில் ரூ. 25 லட்சத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளையும் ஆட்சியர் டி.ஜி. வினய் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் அனைத்து உறுப்பினர்களும் தினந்தோறும் பணிகளை பார்வையிட வேண்டும். இது சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் மற்றும் குடிநீர் தேவைக்கும் பயனுள்ளதாக அமையும் எனத் தெரிவித்த அவர், பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது,பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர் வை. வேல்முருகன், உதவி பொறியாளர் டி. மருதமுத்து மற்றும் பாசனதாரர் சங்க உறுப்பினர்கள், விவசாயிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com