அரியலூர் மாவட்டம் சுள்ளங்குடி, வடுகபாளையம், வெத்தியார்வெட்டு, சுத்தமல்லி, குவாகம் ஆகிய 5 கிராமங்களில் வெள்ளிக்கிழமை (செப்.13) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
வட்டாட்சியர்கள் தலைமையில் நடைபெறும் முகாமில், வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடி தீர்வு வழங்கப்படும்.