ஆண்டிமடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஆண்டிமடத்தில் புதன்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஆண்டிமடத்தில் வரும் 22 ஆம் தேதி புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுக் கூட்டம் நடத்துவது, ஆண்டிமடம் நகரத்தில் பொது கழிவறை வசதி ஏற்படுத்தி தரவேண்டும். ஆண்டிமடத்தில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியின் மாவட்டச் செயலர் செல்வ நம்பி தலைமை வகித்தார். மாநில  துணை அமைப்பாளர்கள் கொளஞ்சி,வேல்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஒன்றியச் செயலர்கள் ராசாபிள்ளை, தேவேந்திரன் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலர் சிவகுமார் நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com