அரியலூர்
தா.பழூர் அருகே கார் மோதி பெண் சாவு
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கார் மோதியதில் நடந்து சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கார் மோதியதில் நடந்து சென்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தா.பழூர் அருகேயுள்ள சிலால் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ராணி(55). சனிக்கிழமை இவர், வயலில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். சிலால் அரிசி மில் அருகே சென்ற போது, ஜயங்கொண்டம் நோக்கிச் சென்ற கார் மோதி சம்பவ இடத்திலேயே ராணி உயிரிழந்தார்.
விபத்து குறித்து தா.பழூர் போலீஸார் பதிந்து, கார் ஓட்டுநர் சேலம் மாவட்டம், வணிக்கம்பட்டி கணேசன் மகன் மணிகண்டன்(30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.