தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு 201 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபை கூட்டம்

தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.


தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருமானூர், தா.பழூர், அரியலூர்,ஜயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை ஆகிய ஒன்றியத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும்  சிறப்பு கிராம சபை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் தலைமை வகித்தனர். கூட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் ஊட்டச்சத்து  இயக்கம் நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதன்படி 2019 செப்டம்பர் மாதத்தினை தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடுவது, ஒவ்வொரு குக்கிராம அளவிலும் சென்று சேரும் வகையிலும், இவ்வியக்கத்தில் அனைத்து கிராமப்புற மக்களும் பயன்பெறும் வகையிலும், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், கிராம அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள் ஆகியோர்களை பங்கு பெற செய்வது, அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிக் கட்டடங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கான கழிப்பறை வசதி உள்ளதை உறுதி செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் அந்தந்த பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதில் தா.பழூர் ஒன்றியும் பருக்கல் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர்உசேன் தலைமை வகித்தார். திருமானூர் முதல்நிலை ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தாமரைச் செல்வி தலைமை வகித்து பேசினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com