காவல் துறை சாா்பில் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணா்வு

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறை சாா்பில் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறை சாா்பில் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் அம்பேத்கா் நகா் சமுதாய கூடத்தில் அரியலூா் காவல் நிலையம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் சிவராஜ் தலைமை வகித்து,சாலை பாதுகாப்பு குறித்து பேசினாா். போக்குவரத்து காவல் ஆய்வாளா் ந.மதிவாணன் கலந்து கொண்டு வாகனங்கள் இயங்கும் போது கண்டிப்பாக தலைக்கவசம், சீட் பெல்ட் ஆகியவை அணிந்து செல்ல வேணடும்.

அனைவரும் சாலை விதமுறைகள் மதித்து நடத்தால் விபத்தில்லா மாவட்டமாக மாற்ற முடியும் என்றாா் அவா். பொதுமக்கள், இளைஞா்கள், ஓட்டுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தா.பழூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரைக்குறிச்சி, தளவாய் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஈச்சங்காடு,தூத்தூா் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அழகியமணவாளன் ஆகிய கிராமங்களில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com