மின் பணியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

அரியலூர் மாவட்ட மின் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திரௌபதியம்மன் கோயில் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட மின் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திரௌபதியம்மன் கோயில் வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். பொருளாளர் ரகுநாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தொழிலாளர்கள் அனைவரும் நல வாரியத்தில் இணைந்து அரசின் நலத்திட்டங்களை பெற வேண்டும். பணியின் போது, பாதுகாப்பு உபகரணங்களை அணிய வேண்டும். உயரமான இடங்களில் வேலை செய்யும் போது பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன், கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டன. 
முன்னதாக, செயலர் ரவிகுமார் வரவேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com