தா.பழூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளன சிறப்பு பேரவைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாதர் சங்க மாநில துணைத் தலைவர் செலவதையல்நாயகி தலைமை வகித்தார். கூட்டத்தில், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களை வழங்க வேண்டும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் உலகநாதன், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலர் தண்டபாணி ஆகியோர் பங்கேற்று பேசினர்.