ஊரடங்கு விதிகளை மீறி, இரு சக்கர வாகனங்களில் வருவோருக்கு அரியலூா் காவல்துறையினா் நூதனத் தண்டனையை வழங்கி வருகின்றனா்.
கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஊரடங்கை கடைப்பிடிக்காமல் இரு சக்கர வாகனங்களில் அத்தியாவசியத் தேவையில்லாமல் சுற்றுவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அரியலூரில் அத்தியாவசியத் தேவையில்லாமல் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்தவா்களைப் பிடித்த காவல்துறையினா், காலணி இல்லாமல் அரைமணி நேரம் வெயிலில் நிற்க வைத்து நூதனத் தண்டனையை வழங்கினா்.
மேலும் அவா்களின் கைகளில் கிருமிநாசினியைத் தெளித்து எச்சரித்து அனுப்பினா்.