அரியலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வரையில், ஊரடங்கு உத்தரவை மீறிச் செயல்பட்ட 78 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனா்.
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியவாசியப் பொருள்கள் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து விதிகளை மீறியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் செயல்பட்டு வந்த 78 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.